கொரோனா அச்சம் காரணமாக கால்பந்து போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி கால்பந்து போட்டியின்போது வேண்டுமென்றே எதிரணியினர் மற்றும் நடுவர் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் அருகில் சென்று இருமினால் சம்பந்தப்பட்ட வீரருக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றலாம் என்று சர்வதேச கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தில் சம்பவத்தின் தன்மையை பொறுத்து நடுவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.