மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் – பேராயர் வலியுறுத்து

உயிரித்த ஞாயிறு தாக்குதலை சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (4) வலியுறுத்தியுள்ளார்.

” தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் வெளியானபோதிலும், தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பை மறந்து மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றுள்ளார். விசாரணை அறிக்கையிலும் அவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, இனியும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல பொறுப்புகூறவேண்டிய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை அவசியம். இது விடயத்தில் 21 ஆம் திகதிக்குள் முன்னேற்றம் அவசியம்.இல்லையேல் வீதிக்கு இறங்குவோம்.” – எனவும் பேராயர் எச்சரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles