அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச, ஜுலை நடுப்பகுதியிலேயே நாடு திரும்பவிருந்தார்.
எனினும், கட்சிக்குள்ளும், அரச கூட்டணிக்குள்ளும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர் முன்கூட்டியே நாடு திரும்புகின்றார்.
நாடு திரும்பியகையோடு முக்கியமான சில சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.










