மொனராகலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 38 பேர் இன்று இனம் காணப்பட்டிருப்பதாக, மொனராகலை மாவட்ட சுகாதாரப்பணிப்பாளர் துசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.
‘மொனராகலை மாவட்டத்தின் செவனகலையில் 27 பேரும், கதிர்காமத்தில் எட்டுப் பேரும், வெள்ளவாயாவில் இருவரும், தனமல்விலையில் ஒருவருமாக 38 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இனம்காணப்பட்டள்ளனர்.
இவ்எண்ணிக்கையுடன் மாவட்டத்தின் மொத்த கோவிட் 19 தொற்றாளர்கள் 428 பேராக உயர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருமே, கோவிட் 19 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், இத்தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்த 574 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்’ என்றும்கூறினார்.
அத்துடன், மொனராகலை மற்றும் பிபிலை ஆகிய இரு இடங்களில் இரு கோவிட்19 தொற்றாளர்கள் மரணமாகியிருப்பதும், குறிப்பிடத்தக்கது.










