மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதியில் இன்று காலை மண்டேமொன்று சரிந்து விழுந்ததால் பலமணிநேரம் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது.
கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையாலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மறே – மஸ்கெலியா, நல்லதண்ணி – மஸ்கெலியா, கெடஸ் – மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. இதனையடுத்து மண்திடலை அகற்றும் பணி இடம்பெற்றது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்










