ம.ம.முவின் இளைஞர் மாநாட்டில் ஹரின் பங்கேற்கமாட்டார்! பின்னணியில் முற்போக்கு கூட்டணியா?

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (17.04.2021)  நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 61 வது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னிணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் விசேட விருந்தினர்களாக ஜக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சாணக்கியன் கலந்துகொண்டாலும், இந்நிகழ்வில் ஹரின் பெர்ணான்டோ பங்கேற்கமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கு உரிய வகையில் அழைப்பு விடுக்காததாலும், அங்கீகாரம் வழங்காததாலும், முன்னணி தன்னிச்சையாக செயற்படுவதாலும் கூட்டணி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

சிலவேளை அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை – அழுத்தத்தின்பேரில் ஹரின் பங்கேற்காமல் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles