ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல்வரையாவது ‘நாடாளுமன்ற பெரும்பான்மையை’ தக்க வைத்துக்கொள்வதற்கு தம்வசம் வைத்துக்கொள்வதற்கு மொட்டு கட்சி தயாராகிவருகின்றது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்க வேண்டும் என மொட்டு கட்சி முக்கியஸ்தர்களான பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளர் என மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் அறிவித்துவருகின்றனர். இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மொட்டு கட்சியில் இருந்து வெளியேறி 30 இற்கும் மேற்பட்டோர் சுயாதீனமாக செயற்படும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பக்கமும் குழுவொன்று சென்றுவிட்டால் அடுத்த தேர்தலில் அது தாக்கமாக அமையும் என்பதாலேயே, கட்சி பலத்தை காக்க மொட்டு கட்சி தற்போது வியூகம் வகுத்துவருகின்றது.