முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும், நீதி கோரியும் யாழில் இன்று(04) மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.










