யாழில் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அடாவடி! – வீடுகள் சேதம்; மூவர் படுகாயம்!!

சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவரைத் தட்டிக்கேட்ட பொதுமக்களின் வீடுகள் மீது சுமார் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு மேற்கொண்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் 8 வீடுகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் சேதமாகப்பட்டுள்ளதுடன் 2 மோட்டார் சைக்கிள்களும் தொலைபேசிகள் சிலவும் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை, கற்கோவளம் – புனித நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது எனப் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி புனிதநகர் பகுதியில் கஞ்சா, கசிப்பு, போதைவஸ்து உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருகின்றார் எனவும், இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவரைத் தட்டிக் கேட்டனர் எனவும் தெரியவருகின்றது.


இதனைத் தொடர்ந்து மேற்படி கிராமத்துக்குள் வாள்களுடன் புகுந்த சுமார் 50 பேர் வரையான கும்பல் சட்டவிரோதச் செயற்பாட்டைத் தட்டிக் கேட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகினர். 8 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் 3 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சூம் வழிமூலம் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களின் தொலைபேசிகளும் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் அப்பகுதிக்கு இரவு சென்றனர் எனவும், பொலிஸாரை வாள் கொண்டு அவர்கள் மிரட்ட முற்பட்டதான் காரணமாக பொலிஸார் இராணுவத்தின் உதவியைக்  கோரியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததை அடுத்து அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் மூவரைக் கைதுசெய்துள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles