யாழ்.மாவட்டத்தில் மேலுமொரு ஆசனம் பறிபோகிறது!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களில் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் படி, 7ஆக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்வதில் மக்கள் கவனயீமாக இருந்துள்ளனர். இதுகுறித்து சரியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எம்.பி. உறுப்புரிமை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 18ஆக இருந்த எம்.பிக்ககளின் எண்ணிக்கை 19ஆக அதிகரிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles