உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
அங்குள்ள மக்களுக்காக ஊதியம், நலன்புரி மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
பிரித்தானியா, சுவிடன், டென்மார்க், லித்துவேனியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் கூட்டு நிதியாக இந்த தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.