ரணிலின் ஆலோசனை தேவை: அவர் மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும்!

” தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை எமது நாட்டுக்கு தேவை. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது.” – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என சமூகவலைத்தளங்களில் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

Latest Articles