ரணிலின் குள்ளநரி ஆட்டம் ஆரம்பம் – கடுப்பில் மொட்டு கட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை வளைத்துபோடுவதற்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்காது, தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளை மொட்டுகட்சி செய்துவரும் சூழ்நிலையிலேயே மொட்டு கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளை வளைத்துபோடுவதற்கான வியூகத்தை ஜனாதிபதி அமைத்துள்ளார்.

அத்துடன், மலையகத்தில் உள்ள சிறு கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles