ரஷ்யாவுடனான போரை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியா உக்ரைன் போர் தடையின்றி தொடர்ந்து 117வது நாளாக நீடிக்கிறது.
உக்ரைனின் தொழில்துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருகிறது. இதனால் உக்ரைனின் கிழக்குப் பகுதிகள், கடந்த பல வாரங்களாக கடுமையான போர் தாக்குதல்களால் உலுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
“இந்த வாரம் ரஷியா போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்று நாங்கள் வெளிப்படையாக எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகளின் புதிய தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது.
நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம், எங்களுடையது அனைத்தையும் திருப்பி பெறுவோம், கருங்கடல் உக்ரேனியர்களுடையதாகவும் பாதுகாப்பாகவும் மாறும். நம் ராணுவம் காத்துக்கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக உக்ரைன் காத்திருக்கிறது. அவர்களிடமிருந்தௌ இந்த வார இறுதிக்குள் ஒரு நம்பிக்கையான முடிவை எதிர்பார்க்கிறோம். உக்ரைனுக்கு இதுபோன்ற சில விதிவிலக்கான முடிவுகள் அமைந்து இருப்பதாக” ஜெலென்ஸ்கி கூறினார்.