ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த போரில் ரஷ்யா கடந்த 2022 அக்டோபர் மாதம் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் இந்த செயல் மனிதத் தன்மையற்றது என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதனையடுத்து ரஷ்யாமீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்கு (வயது 69) மற்றும் இராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதும் சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.