ராகலை நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று (19) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சில்லறை கடை, கோழி கடை மற்றும் தொடர்பாடல் நிலையம் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்தால் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. எனினும்,பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், ராகலை பொலிஸார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிசாந்தன்