9ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக சசீந்திர ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பொதுத்தேர்தலில் மொனறாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட சசீந்திர ராஜபக்ச அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்றார்.
8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்சவின் மகனே இவர்.
அதேவேளை, புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.