யாழ்ப்பாணத்தை சேர்ந்த ‘ரிக் ரொக்’ பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய காதலி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச் சேரி பொலிஸார் நேற்றுத் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘ரிக் ரொக்’ சமூக வலைத்தளத்தில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக் கொண்டு வந்துள்ளார்.
அந்த இளைஞனுடன் ‘ரிக் ரொக்’ மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்துவந்துள்ளார்.
இந்நிலையில் தனது காதலனுக்கு, அதிநவீன மோட்டார் சைக்கிள்ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும் தனது வீட்டில் இருந்துசுமார் 19 பவுண் நகையைக் களவெடுத்து அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.
வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின்பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததிருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , யுவதிமீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளைத் தான் களவெடுத்துக் காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரது காதலனை கைது செய்தபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் வீட்டில் நகை களை களவெடுத்த யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள்என ஏழு பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏழு நபர்களை யும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
