” ரிஷாட் பதியூதினின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதியின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவை செய்யும் போது, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சிறுமி பொலிஸ் விசாரணையின் போது கண்ணீருடன் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏனைய 11 பெண்களில் ஒரு சிறுமியே இவ்வாறு பொலிஸாரிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார்.
சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டுகளை சரியாக கழுவவில்லை என்றால் அதில் இருக்கும் அழுக்கு நீரை முகத்தில் வீசுவார் என பாதிக்கப்பட்ட சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாட் பதியூதினின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பணிப் பெண்கள் அனைவரையும் இந்த முறையில் சித்திரவதைக்குட்படுத்தி மோசமான முறையில் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் துடைப்பக் கட்டை உடையும் வரை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த அறையில் இருந்து சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை பொலிஸார் இதுவரையில் கண்டுபிடித்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் குறிப்பு : இந்தச் செய்தி திவயின என்ற சிங்களப் பத்திரிகையில் எழுதப்பட்ட விதத்தை இங்கு தந்துள்ளோம். ரிஷாட் பதியூதீனின் விவகாரம் தற்போது சிங்கள ஊடகங்களினால் அரசியலாக்கப்பட்டு, செய்திகள் வெளியிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன், முஸ்லிம் இளைஞர்கள் இனவாதரீதியான வாக்குவாதங்களில் சமூக வலைத்தளங்களில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகிறது. இதனால் தமிழ் இளைஞர்களும், முஸ்லிம் இளைஞர்களும் இனவாத ரீதியான கருத்துப் பரிமாற்றங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ரிஷாட் பதியூதீனின் மனைவி மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை அறிக்கை எதுவும் வெளிவராத நிலையில், திவயின பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ரிஷாட்பதியூதீன் தரப்பில் கேட்டபோது, ரிஷாட் பதியூதீனின் மனைவி மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமானவை என்றும், அடிப்படையற்றவை என்றும் குறிப்பிட்டார். அத்துடன், சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதில் எந்தவித சிக்கல்களும் இல்லாத போதிலும், அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சிகள் வெறுக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.