சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு லண்டனில் நடத்தப்பட்ட நிழ்ச்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னேற்றம் கொண்டாடப்பட்டது. இந்தோ-ஐரோப்பிய காஷ்மீர் மன்றம் (IEKF UK-Indo-European Kashmir Forum) இந்து கவுன்சில் UK உடன் இணைந்து Brent இந்தியா அசோசியேஷன் என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
லண்டனுக்கு வருகை தந்த காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் ஆர்வலரான திரு பஷீர் அசாத் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேஃபெயாரின் லார்ட் ராமி ரேஞ்சர், பாப் பிளாக்மேன் MP, பிஜேபியின் திரு குல்தீப் ஷெகாவத், காஷ்மீரி பண்டிட் திரு சுஷில் பண்டிட் மற்றும் டாக்டர் கெளதம் சென் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
உள்ளூர் பங்கேற்பாளர்களைத் தவிர, அமெரிக்காவில் இருந்து சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற காஷ்மீரி பண்டிட் திரு விஜய் சஜவால் ஜூம் மூலம் நிகழ்வில் இணைந்தனர்.
நிகழ்வின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 370வது பிரிவை ரத்து செய்ததில் இருந்து ஏற்பட்டுவரும் மேம்பட்ட சூழ்நிலையை பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், வர்த்தகத்தில் முன்னேற்றம், பிராந்தியத்தில் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி குறித்து அவர்கள் குறிப்பிட்டனர்.
இருப்பினும், பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீரி பண்டிட் சமூகத்தை முழுமையாக மறுவாழ்வு செய்ய அதிக முயற்சிகள் தேவை என்று இங்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. 1989 மற்றும் 1990 களின் முற்பகுதியில் பள்ளத்தாக்கில் நடந்த ஜிஹாத் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதன் மூலம், சமூகத்திற்கு நீதி வழங்குவதன் முக்கியத்துவத்தை பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.