லார்ட்ஸ் மைதானத்தில் 3ஆவது வெற்றியை பதிவுசெய்தது இந்தியா

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.

கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பெற்றிருந்தது.

1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையி்லான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நேற்று அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும்.

மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 10-வது இந்திய வீரர் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles