லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை ஒடின்டன் தோட்டத்தில் நேற்றிரவு இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளொன்றும் தீயிட்டுக்கொளுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மோதல் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸாரால் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
நிருபர் – பா.பாலேந்திரன்