தனது வீட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, வெட்டுமகட பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியின் குறுக்கே சைக்கிள் ஓட்டிச் சென்ற சிறுவன் மீது மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த சிறுவன் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.










