வசந்தகால கொண்டாட்டத்தை முன்னிட்டு நுவரெலியாவில் கிரிக்கெட் போட்டி

நுவரெலியாவில் நடைபெற்றுவரும் வசந்தகால விழாவினை சிறப்பிக்கும் வகையில் “Battle of Little England” கிண்ணத்திற்கான மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளில் நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி, மற்றும் காமினி தேசிய பாடசாலையின் அதிபர்கள் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி அதிபர் எம். ரவிச்சந்திரன் கூறியவை வருமாறு,

நுவரெலியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் “டியவவடந ழக டவைவடந நுபெடயனெ” கின்னத்திற்கான கிரிகெட் போட்டி பாரிய வெற்றியை தந்திருந்தது.

அதேபோல இவ் ஆண்டுக்கான போட்டியும் வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆகையால் இப்போட்டி சிறப்பு பெற பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் ஒத்துழைப்பு தந்து உதவுமாறு கெட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை இந்த கிரிகெட் போட்டி தொடர்பில் எதிர்வரும் ( 27) ஆம் திகதி வாகன பேரணி ஒன்றும் நுவரெலியா நகரில் நடத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles