வடை அல்ல…..தங்கத்தை களவாடிய காகம் – கேரளாவில் வினோத சம்பவம்

தங்க செயின், வளையலை திருடி தென்னை மரத்தில் உள்ள கூட்டிற்குள் காகம் வைத்திருந்த வினோத சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கண்ணன்கடவு பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி ஷரீபா. இந்த தம்பதிக்கு பாத்திமா ஹைபா என்ற மகள் உள்ளார். அவர் தரம் ஒன்றில் கல்வி கற்கின்றார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஷரீபாவின் உறவினர் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஷரீபா தன் மகள் பாத்திமாவுடன் பங்கேற்றுள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மகள் பாத்திமாவுக்கு தங்க செயின் மற்றும் 2 தங்க வளையல்களை அணிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருவரும் வீடு திரும்பிய நிலையில் தங்க செயின் மற்றும் வளையல்களை சிறுமி கழற்றி பேப்பரில் சுற்றி ஒரு கூடைப்பையில் வைத்துள்ளதாகவும் அதை பத்திரமாக எடுத்துவைக்கும்படியும் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மகள் கூறியதை தாயார் ஷரீபா மறந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஷரீபா தனது மகளுடன் உறவினர் வீட்டிற்கு செல்ல புறப்பட்டுள்ளார். அப்போது, மகள் கூறிய இடத்தில் நகைகள் இல்லை. பேப்பரில் மடித்துவைக்கப்பட்டிருந்த நகைகள் காணாததால் ஷரீபா அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக, உறவினர்களுடன் சேர்ந்து வீடு முழுவதும் நகைகளை தேடியுள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தின் அடியில் குப்பைகளுக்கு நடுவே தங்க செயின் கிடந்துள்ளது. இதனால், ஆனந்தமடைந்த குடும்பத்தினர் தொடர்ந்து தென்னைமரத்தை சுற்றி தேடியுள்ளனர்.

அப்போது, தென்னை மரத்தில் கூடு கட்டியுள்ள காகம் பிளாஸ்டிக் வளையல், சிறு குச்சிகளை எடுத்துச்செல்வதை உறவினர் சுலிஹா, பக்கத்துவீட்டுக்காரர் சாந்தா ஆகியோர் கவனித்துள்ளனர்.

இதனால், சந்தேகமடைந்த ஷரீபா தனது உறவினர் அகமது கோயாவை தென்னை மரத்தில் ஏறி காகத்தின் கூட்டில் சோதனை செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து, அகமது தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அங்கு அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சிறுமியின் தங்க வளையல் காகத்தின் கூட்டிற்குள் இருந்துள்ளது.

இதையடுத்து, தங்க வளையலை அகமது கைப்பற்றி மரத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர், வளையலை ஷரீபாவிடம் ஒப்படைத்தார்.

நன்றி – தினத்தந்தி

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles