வட்டவளை ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக வட்டவளை தோட்டத்தில் 07 பேருக்கும், வட்டவளை நகரப் பகுதியில் 03 மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளனடன் ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் 72 பேருக்கு இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களோடு தொடர்புகளை பேணிவந்த600 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை அதிக தொற்றாளர்கள் உறுதியான வட்டவளை மவுண்ஜின் தோட்டம் சுயதனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதோடு குறித்த தோட்டப் பகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்லவோ வெளியார்கள் உள் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.










