‘வருடாந்தம் தலைவர் பதவியில் மாற்றம்’ – ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயார்!

தலைவர் உட்பட  கட்சி நிர்வாகிகளை வருடா வருடம் தெரிவுசெய்யும் விதத்திலான ஜனநாயக வியூகத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது – என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது கட்சிக்கான யாப்பு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தவாரம் நிறைவேற்றுக்குழுகூடி அதற்கான ஒப்புதலை வழங்கும். அதன்பின்னர் கட்சி யாப்பின் பிரகாரம் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

முதலாவதாக செயற்குழுவின் ஊடாக சகல பதவிகளுக்குமான நிர்வாகிகளை கட்சி தலைவர் தெரிவுசெய்வார். இதற்கு முகாமைத்துவக்குழு, நிறைவேற்றுக்குழுவின் அனுமதியும் பெறப்படும்.

இரண்டாவதாக கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தேர்தல் தொகுதிகளில் முன்னெடுக்கவேண்டிய விடயங்கள், கீழ்மட்ட அரசியல் இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்படும்.

அத்துடன் புத்திஜீவிகள் குழு, சட்டத்தரணிகள் குழு, தொழிற்சங்க பிரிவுகள் என கிளை அமைப்புகள் கட்டியெழுப்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்றுள்ளன. நிறைவேற்றுக்குழுவின் அனுமதி கிடைத்தபின்னர் இறுதிப்படுத்தப்படும்.

2021 ஆம் ஆண்டுக்காக அங்கத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல் அடுத்தவாரம் முதல் ‘வெற்றிபெறுவோம்’ எனும் தொனிப்பொருளின்கீழான வேலைத்திட்டமும் 6 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும். 2021 ஜனவரி மாதத்துக்குள் இதற்கான பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய யாப்பில் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்களின் பதவி காலம் ஒரு வருடமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருடா, வருடம் நிறைவேற்றுக்குழு ஊடாக தலைவர் பதவி உட்பட நிர்வாக பதவிகளுக்கு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டு, வருடாந்த சம்மேளனத்தில் அதற்கு அனுமதி பெறவேண்டும். இவ்வாறு ஜனநாயக வியூகத்தின் அடிப்படையிலேயே யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம்பிக்கையும் கட்டியெழுப்பட்டுள்ளது.

செயற்குழு இருந்தாலும் நிறைவேற்றுக்குழுவே பலம்பொருந்திய கட்டமைப்பாக கட்சியில் விளங்கும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles