வர்த்தகப் போரை கைவிட அமெரிக்கா, சீனா இணக்கம்!

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10 சதவீத அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், “இரு தரப்பும் உயர்த்தப்பட்ட வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. 100 சதவீதத்துக்கு மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் 10 சதவீதமாக இருக்கும்.

இரு நாடுகளும் தங்கள் தேசிய நலனை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தின. நாங்கள் இருவரும் வர்த்தக சமநிலையை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளோம், அமெரிக்கா அதை நோக்கி தொடர்ந்து நகரும். இரு தரப்பும் தங்களுக்கு இடையேயான வர்த்தக வேறுபாடுகளை குறைப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது.” என குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய வரித் தாக்குதலைத் தொடங்கினார்.
குறிப்பாக, சீனா மீது அதிக வரிகளை விதித்தார்.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி 144 சதவீத அளவுக்கும், சீனா விதித்த இறக்குமதி வரி 125 சதவீத அளவுக்கும் சென்றன.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக மோதல், உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை சீர்குலைத்து நிதிச் சந்தைகளை பதம் பார்த்தது.

இருவழி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை இது ஸ்தம்பிக்க வைத்தது. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, தேக்கநிலை குறித்த அச்சங்களைத் தூண்டியது. அதோடு, சில துறைகளில் ஆட்குறைப்புக்கும் இது வழி வகுத்தது. இந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளை நிதிச் சந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில், மூத்த அமெரிக்க மற்றும் சீன பொருளாதார அதிகாரிகளுக்கு இடையேயான முதல் நேருக்கு நேர் சந்திப்பு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், இரு நாடுகளும் தங்கள் பரஸ்பர வரி உயர்வை 10 சதவீதம் ஆக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இதையடுத்து, திங்களன்று பங்குகள் உயர்ந்தன. டாலர் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு உறுதியாகியது. இந்த பேச்சுவார்த்தைகள் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles