வவுனியா, குருமன்காடு, கோவில் வீதி பகுதியில் கிணற்றி லிருந்து 29 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் இன்று மீட்கப் பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பெண்ணைக் காண வில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் அவர் சடலமாகக் காணப்படுள் ளார்.
இதையடுத்து வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தக வலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மரணம் தொடர்பான மேலதிக விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.
29 வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இந்த மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையா எனப் பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.
