பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் நாளை (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறும், பாதீடு ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.