இந்த ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை நிலையத்தில் உதவியாளராக கடமையாற்றியவரே (வயது – 38) , குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பணத்துக்காக இதனை மாணவருக்கு வட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தாரா அல்லது இதன் பின்புலம் என்ன என்பது பற்றி விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
சீல் வைக்கப்பட்டிருந்த வினாத்தாள் கட்டை உடைத்து, படமெடுத்தே அவர் அனுப்பிவைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக வெளியானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
