கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் சனத் நிஷாந்தவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலியாகினர்.
இவ்விபத்தையடுத்து சாரதி கைது செய்யப்பட்டார். பொலிஸ் காவலின்கீழ் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விபத்து இடம்பெறுவதற்கு முதல் நாள், குறித்த சாரதி பதிவிட்டிருந்த ஒரு சமூகவலைத்தள பதிவு ,விபத்தின் பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மரணம் தொடர்பிலேயே அந்த பதிவு அமைந்திருந்தது.