‘விலை உயர்வு’ – இன்று வெளியாகவுள்ள மற்றுமொரு அறிவிப்பு!

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை தேவையில்லாமல் அதிகரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுக்கும்போது, அவர்களின் இயக்கச் செலவுகள், தொழில்துறையைப் பாதுகாத்தல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

வழமையான எண்ணிக்கையில் 50% பஸ்கள் மாத்திரமே இயங்கி வருவதாகவும், தொழிற்துறையைப் பாதுகாக்கும் வகையில் தமது வருமானத்தை அதிகரிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

முற்பணம் செலுத்திய பயண அனுமதி “டச் அண்ட் கோ” செயற்திட்ட அறிமுகம் உள்ளிட்ட மோட்டார் போக்குவரத்து ஆணைச் சட்டத்தின் விதிகளை திருத்தவும் பரிந்துரைத்துள்ளோம்.

தொழிற்துறையில் ஈடுபடுபவர்களுக்கு முற்பணம் செலுத்திய பயண அனுமதி அட்டை மூலம் நேரடியாக வருமானத்தை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles