விவசாய அமைச்சிற்குள் விசேட புலனாய்வு பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
விசேட புலனாய்வுப் பிரிவொன்று இல்லாத காரணத்தினால் குறித்த பிரிவை நிறுவுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சிற்குள் 13 மேலதிக செயலாளர்கள் பணிபுரிவதாக அமைச்சு குறிப்பிட்டது, சிலர் விவசாய மற்றும் நிர்வாக சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுக்கு கடமைகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் உட்பட அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்ட சில முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பிரிவு இல்லாதது மிகவும் கவலைக்குரியது என்று அமைச்சர் கூறினார்.
எனவே, இதற்கு மாற்றாக அமைச்சில் தற்போது மேலதிக செயலாளர் மற்றும் தேவையான பணியாளர்களை நியமித்து பிரிவை நிறுவுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
கடந்த காலங்களில், உர விநியோகம், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதிகள் அக்கறையுடன் வழங்கப்படாமை மற்றும் விவசாயிகளின் கணக்குகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெறத் தவறியமை தொடர்பில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
