வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஆசிரியரொருவர், திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மரணமாகியுள்ளார்.
ஹப்புத்தளை நகரில் (இன்று) 05-10-2021 பிற்பகல் 1 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளைப் பகுதியில் தமிழ்ப் பாடசாலையொன்றின் 51 வயது நிரம்பிய தமிழாசிரியர் ஒருவரே, மரணமானவராவார்.
பாதையில் விழுந்த அவ் ஆசிரியரை, எவருமே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முன்வரவில்லை. 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டு, அம்புலன்ஸ் வாகனம் வந்து, அவர் ஹப்புத்தளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அவருக்கு பி.சி. ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, மருத்துவமனை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
எம்.செல்வராஜா, பதுளை
