வெற்றிநடைபோடுமா இங்கிலாந்து? இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி  ரி -20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று  செவ்வாய்க்கிழமை நடைபெறுகி;றது.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் இந்த போட்டி தொடரில் ஆறுதல் வெற்றியை சுவைக்க பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி போராடும்.

எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles