வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் – நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!

2012 இல் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது 8 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த சம்பவத்தின்போது சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில் ரஞ்ஜன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைதியின்மையின் போது, 27 கைதிகள் உயிரிழந்திருந்தனர்.

கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தினால் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் இடம்பெற்றபோது மஹிந்த ஆட்சியே நிலவியது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டார்.

Related Articles

Latest Articles