கடற்படையினர் மன்னார், தவுல்பாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட நடவடிக்கையின் போது 1,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் SLNS கஜபாவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவுல்பாடு சில்லறை விற்பனை நிலையமொன்றில் கடற்படையினர் சோதனை நடத்தியதில் 1000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குருநாகல் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 23 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.