வெளியானது புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

இன்று தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் இந்த சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

நாட்டினுள் கொவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் கொவிட் பரவல் இன்னும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மண்டப திருமணங்களுக்கு 50 பேர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது  திறந்த வெளி திருமணங்களுக்கு 75 பேர் அனுமதி பண்டிகைகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் (உட்புற/வெளிப்புற) அனுமதி இல்லை மொத்த விற்பனைக்காக பொருளாதார நிலையங்கள் செயற்பட அனுமதி உணவகங்களில் உணவருந்த 30% அனுமதி பயணிகளின் இருக்கைக்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles