வெள்ளவத்தை பகுதியில் மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை-விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை தவறி வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டராக பணியாற்றி வந்தவர் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

அந்த நபர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடிக்கு விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles