வெள்ளையரின் பண்ணைக்குள் நுழைந்த கறுப்பின பெண்கள் கொலை!

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் பண்ணைக்குள் உணவு சேகரிக்கச் சென்ற கறுப்பின பெண்கள் இருவர், சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு ஜோஹன்னஸ்பர்க்கின் லிம்போபோ மாகாணத்தில் ஜகாரியா ஜோஹன்னஸ் ஆலிவியர் என்ற வெள்ளை இன பண்ணையாளருக்குச் சொந்தமாக பண்ணை ஒன்று உள்ளது.

இந்தப் பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுப்பதற்காக அவ்வப்போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் திருட்டுத்தனமாகச் செல்வதுண்டு. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த மரியா (44) மற்றும் லொகாடியா (35) என்ற இரண்டு பெண்கள் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் திரும்பி வரவில்லை. அந்தப் பண்ணைக்குள்ளேயே அவர்கள் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பன்றிகளுக்கு உணவாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், இரண்டு பெண்களின் உடல்களும் பன்றிகளால் சாப்பிட்டு மிச்சம் வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு தொழிலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரண்டு பெண்களையும் சுட்டுக்கொன்று, அவர்களது உடல்களை வெட்டி பன்றிக்கு உணவாக்கியிருப்பதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்ணையின் உரிமையாளர், அத்துமீறி யார் பண்ணைக்குள் நுழைந்தாலும் சுட்டுக் கொல்லும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததும், தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற வாயிலில், ஏராளமான கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தென்னாப்பிரிக்காவின் நில உரிமையில் நீடித்து வரும் ஏற்றத்தாழ்வுகளின் பரந்த பிரச்னையைப் பற்றி பேசுகிறது. நிறவெறியினபோது, ​​பல கறுப்பின மக்கள் தங்கள் நிலத்திலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இன்று பெரும்பாலான பெரிய வணிகப் பண்ணைகள் வெள்ளையர் உரிமையின் கீழ் இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கிராமப்புறங்களில் உள்ள பல கறுப்பின மக்கள் தொடர்ந்து வறுமையில் வாழ்வதாகவும், பண்ணைகளில் உணவுக்காக துப்புரவுத் தொழிலை நாடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles