திருத்தம்!
வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!!
2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு ஆதரவளித்துள்ளது என இதொகா ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.
இதொகா ஊடகப்பிரிவால் அனுப்பட்டிருந்த செய்தியை நாமும் பதிவிட்டிருந்தோம்.
ஆனால் சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்ட காத்தையா குனாலன் என்பவரே தமது ஆதரவாளர்களுடன் இதொகாவில் இணைந்துகொண்டுள்ளார் என்பதே உண்மை.
எனவே, சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு ஆதரவு என்ற செய்தி தவறு. அதற்காக வருந்துகின்றோம்.
