வேவல்வத்த தோட்டத்தில் வீடு உடைப்பு: 8 பேர் கைது!

இரத்தினபுரி, வேவல்வத்த தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (11) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேவல்வத்த தோட்டத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலர் குறித்த வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை வேவல்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எவ்.எம். அலி

Related Articles

Latest Articles