வைத்தியருக்கு கொரோனா – டயகம வைத்தியசாலைக்கு பூட்டு!

நுவரெலியா டயகம வைத்தியசாலையின்   வைத்தியருக்கு  கொரோனா வைரஸ் தொற்று இன்று (19) உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா டயகம வைத்தியசாலையின் வைத்தியருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இன்று (19) உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.

வைத்தியருடன் தொடர்பைப் பேணிய 18 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்களை வைத்திய சிகிச்சைக்காக அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் குறிப்பிட்டுள்ளார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles