ஹட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர்செல்வன் கடந்த 17.18.19 ஆம் திகதிகளில் கண்டி ,கொட்டகலை மற்றும் தலவாகலையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
அவர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மொட்டு கட்சி உறுப்பினருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
