ஹட்டன் போராட்டத்துக்கு மலையக மக்கள் சக்தி பேராதரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வென்றெடுத்தல், காணி உரிமையை வலியுறுத்தல் உட்பட உரிமைசார் விடயங்களை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஹட்டனில் நாளை (28) முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு மலையக மக்கள் சக்தி முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல தோட்ட இளைஞர்கள், அரச ஊழியர்கள், வர்த்தகவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் அழைப்பு விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் ஆயிரத்து 700 ரூபா போதாது என்றபோதிலும் அதனை ஒரு தற்காலிக தீர்வாக ஏற்கின்றோம் எனவும், சம்பள பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles