ஹப்புத்தளையில் குளவிக்கொட்டு: ஏழு பேர் பாதிப்பு

ஹப்புத்தளை பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவி கொட்டுக்கு  இலக்கான 06 பெண்களும் ஆண் ஒருவரும் ஹப்புத்தளை  பங்கட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தலை சேர்வூட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 29 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட 6 பெண்களும், கோனமுட்டாவ தோட்டத்தில் 65 வயதுடைய ஆண் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையின் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ​​பிற்பகல் 2.20 மணியளவில் குளவி கொட்டியதால் 7 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும்  சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles