ஹப்புத்தளை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் புபுது கருணாதிலக்க தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கை (இன்று) 09-11-2021 வெளியான போது, மேற்படி எட்டு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த தியத்தலாவையில் இரு பாடசாலைகளின் மாணவர்கள் எட்டுப் பேரே, கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளனர்.
அத்துடன், பண்டாரவளை சிறுவர் காப்பகமொன்றில் ஐந்து வயதுகள் மற்றும் அதற்கு குறைவான வயதுகளைக் கொண்டு 27 சிறார்கள், கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளனர்.
மேலும் அக்காப்பகத்தில் பணியாளர்கள் ஐவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. அவ்வகையில் அக்காப்பகத்தில் மொத்தம் 32 பேர் தொற்றுக்கிழக்காகியுள்ளனரென்று பண்டாரவளை சுகாதார சேவை வைத்திய அதிகாரி டி.எம்.ஏ.ஆர். திசாநாயக்க கூறினார்.
இக்காப்பகத்தில் 52 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொண்ட போது, அவர்களில் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேரும், சிறுவர் காப்பகத்தில் 32 பேருமாக 40 பேரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் நேரடிக் கண்கானிப்புக்களுடன், கோவிட் 19 சிகிச்சை நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.