ஹப்புத்தளையில், பெருந்தோட்டமொன்றில் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (17-12-2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத் தகவலை ஹப்புத்தளை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் வெளியிட்டார்.
ஹப்புத்தளைப் பகுதியின் பிட்டரத்மலை பெருந்தோட்டப் பிரிவிலேயே, மேற்படி தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும், கொழும்பு கொச்சிக்கடைப் பகுதிக்குச் சென்று, மீளவும் மேற்படி பிட்டரத்மலை பெருந்தோட்டப் பிரிவிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இவ்விருவருக்கு பி.சி. ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றதையடுத்து, இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் இவ்விருவரும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு, இன்று 17-12-2020ல் அனுப்பப்பட்டனர்.
ஹப்புத்தளைப் பகுதியில் கொரோனா தொற்றுத் தடுப்பு வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை










