ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளை பொலிஸ் பிரிவில் மூவர் கைது!

பண்டாரவளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (13) மாதட்டில்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 347 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 32 மற்றும் 33 வயதுடைய திவிதொட்டவெல, வெலிமடை மற்றும் பேர்வெல்ல, அம்பகஸ்தோவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles